நெடுவாசல் போராட்ட ஆதரவு ஆர்ப்பாட்டம்!
- விவசாயத்தையும் விவசாயிகளையும் அழித்தொழிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முற்றிலும் கைவிட வலியுறுத்தி நெடுவாசல் கிராம மக்கள் நடத்தும் போராட்டத்தை ஆதரித்து.
- சேலம் மாநில சங்க செயற்குழு முடிவின்படி,
06-03-2017 அன்று மாலை முசிறி தொலைபேசியகம் முன்பு நமது மாவட்ட சங்கம் சார்பில் ஆதரவு ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடத்தப்பட்டது.
மாவட்ட துணை செயலர் தோழர். பாலகுரு மற்றும் ஞானவேல் அவர்களின் முழக்கங்களுடன், மாவட்ட செயலர் S பழனியப்பன், மாநிலசெயலர் K நடராஜன் ஆகியோர் நெடுவாசல் போராட்டத்தை ஆதரித்து பேசினார்.
ஒலிபெருக்கி இல்லாமலேயே மாநில செயலர் கணீர் குரலில் ஆற்றிய உரை மக்களை வெகுவாக ஈர்த்தது.
No comments:
Post a Comment