சிறப்பாக நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
BSNL ஊழியர்கள் தேசிய கூட்டமைப்பு சார்பில் திருச்சி BSNL பொது மேலாளர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. BSNLEU சங்கமும் இணைந்து ஆர்பாட்டத்தில் பங்கேற்றது.NFTE மாவட்ட தலைவர் தோழர். P சுந்தரம், BSNLEU மாவட்ட தலைவர் தேவராஜன் ஆகியோர் தலைமையில்,
- மூன்றாவது ஊதியக்குழு பேச்சுவார்த்தையை துவக்கு…
- ஊதியக்குழு சம்பந்தமான DPE வழிகாட்டுதலை வெளியிடு…
- BSNL நிறுவனத்தை தனியாருக்குத் தாரை வார்க்காதே…
- தனி செல்கோபுர நிறுவனம் ஆரம்பிக்காதே…
ஆகிய கோரிக்கை களை வலியுறுத்தியும்
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்தும்
ஆர்ப்பாட்டம்.சிறப்பாக நடைபெற்றது.
NFTE மாவட்ட செயலர் S பழனியப்பன், துணை செயலர் பாலகுரு, TEPU மாநில தலைவர். இளங்கோவன், மாவட்ட செயலர் ரவீந்திரன், BSNLEU மாவட்ட செயலர் அஸலம் பாஷா, துணை செயலர் சுந்தர்ராஜ் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். மாநில துணைத்தலைவர் தோழர். ஆறுமுகம், சிறப்பு அழைப்பாளர் தோழர் ஆசைத்தம்பி உள்ளிட்ட 150 க்கும் மேற்பட்ட தோழர்கள் முழுதும் இருந்து கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்ட பதிவுகளை காண கீழே சொடுக்கவும். ↓↓↓
No comments:
Post a Comment